Sunday, August 3, 2014

தென்னாபிரிக்காவில் ஆரம்பத்தில் நிற பேதத்தின் அடிப்படையில் ஆட்சி செய்த அரசாங்கத்தையும் விட இஸ்ரேல் மிகவும் மோசமானது

காசா மீது தொடர்ந்தும் தாக்குதல் நடத்துவதன் மூலம் இஸ்ரேல் பாரிய யுத்தக் குற்றமொன்றை புரிந்து வருவதாக பிரபல யூத அமெரிக்க சிந்தனையாளர் நோம் சொம்ஸ்;க்கி தெரிவித்துள்ளார்.

 சர்வதேச நாடுகளின் கண்டனங்களை கருத்திற்கொள்ளலாம் இஸ்ரேல் தொடர்ந்தும் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இதுவரை ஆயிரத்து 800 பலஸ்தீனர்கள் உயிரிழந்திருக்கின்றார்கள். 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தென்னாபிரிக்காவில் ஆரம்பத்தில் நிற பேதத்தின் அடிப்படையில் ஆட்சி செய்த அரசாங்கத்தையும் விட இஸ்ரேல் மிகவும் மோசமானது என சொம்ஸ்க்கி தெரிவித்துள்ளார். காசாவில் வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும் யுத்தக் குற்றமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேல் மீது ஆயுதத் தடைகளை விதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments: