Sunday, April 22, 2012

தம்புள்ளை அல் ஹைராத் பள்ளிவாசலை மற்றுமொரு இடத்திற்கு இடமாற்ற ஏற்பாடு


தம்புள்ளை அல் ஹைராத் பள்ளிவாசலை மற்றுமொரு இடத்திற்கு இடமாற்றும் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எப்படியாவது இந்தப் பிரச்சனையை சமாளிக்க வேண்டிய சூழ்நிலைக்கு முகம்கொடுத்திருக்கும் அரசாங்கம் இனங்கள் மத்தியில் முரண்பாடுகள் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் இந்த மாற்று நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ரங்;கிரி தம்புள்ள விகாரை புனித பிரதேசத்தில் இப்பள்ளிவாசல் அமைந்துள்ளமையினால் இப்பள்ளிவாசலை உடனடியாக அகற்றுமாறு புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சரும் பிரதமருமான டி.எம்.ஜயரட்ன இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

அகற்றப்படும் பள்ளிவாசலுக்கு பதிலாக வேறு பொருத்தமான இடத்தில் இஸ்லாமியர்கள் சமய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளை பிரதமர் அறிவுறுத்தியதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பளையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலொன்றையடுத்து பிரதமர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இஸ்லாமிய சமய தலைவர்கள் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸிஇ மேல் மாகாண ஆளுநர்  அலவி மௌலானா பிரதியமைச்சர்கள் அப்துல் காதர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் டி.எம்.ஜயரட்ண

"உலகின் அனைத்து முஸ்லிம் நாடுகளும் இலங்கையுடன் நட்புடன் உள்ள நிலையில் இத்தகைய சிறிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இனங்கள் மதங்களிடையே அநாவசிய  மோதல்களை ஏற்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது"  எனவும் பிரதமர் கூறியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதி அமைச்சர் எம்.ஏல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் குறித்த பள்ளிவாசலுக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு விடயங்களை கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் காணி அமைச்சர் ஜனக பண்டார தென்கோண் மற்றும் தம்புள்ள பிரதேச செயலாளர் ஆகியோரை அமைச்சர் ஹக்கீம் சந்தித்து இது தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளார்.  



No comments: