முப்பொழுதும் முயற்சிக்கிறேன்
உன் முகம் மறப்பதற்கு..
முடியவில்லை..தொடர்கிறது
என் நிழலாய் உன் நினைவு..
கருத்தரித்த கனவுகளால்
உறக்கத்திலும் உலறுகின்றேன்..
கற்பனை எங்கிலும்
கற்பகக் கன்னி நீ…
கள்ளச் சிரிப்பிலே – எனை
கொள்ளையடித்தவள்.
என் வெள்ள மனதிலே
வைரவேர் ஊன்றியவள்..
முழைத்துப் போனதால்
தலைநீட்டப் பார்க்கிறதே
தழைத்த என் காதல்
சுரம் மாறி
வார்த்தை தடுமாறி
கதைபேச நினைக்கையிலே
மனம் மாறி – நீ
கரம் மாறிப் போவதேன் பைங்கிளியே !

No comments:
Post a Comment