Tuesday, June 19, 2012

நட்பு பழஞ்சோறுதான்..




நினைவுகள் நிழலாட
அவள் என்னில் சுழியோட
சந்தனமாய் மணம் வீச
சந்தித்தேன்..சுகம் காண

பெண்ணவளோ இப்போது
பொறத்தாணின் துணையாவாள்..
ஒரு பிள்ளைத் தாயானாள்..
ஒடுக்கத்தில் மிகையானாள்..


ஒன்லைனில் ச்செட் செய்ய
ஓ நண்பா என் செய்றாய்..
என்றென்னைக் கேட்டவளை
நான் சீண்ட
சீறிப் பாய்ந்தாள் பாம்பாக..

சிதறிப் போனது
செதுக்கி வைத்த நம்
சிற்பம்..
அர்ப்பமாய் அலட்சியம்
செய்தாள்
வெப்பமாய் கொதிதெழுந்தாள்..
வெந்து போனாலும் பரவாயில்லை..
நம் நட்பின் வேரே
தூர்ந்து போனது..

பழகிய நட்பு பழஞ்சோறுதான்..
காலத்தால் அது பழுதாகிவிடும்

No comments: